Tuesday, July 31, 2012

கீழக்கரையில் தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி !



கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் கல்லூரி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருப்புல்லாணி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய உலக மக்கள் தொகை தின பேரணி அனைவருக்கும் கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நலன்களை வலியுறுத்தி நடைபெற்றது.

இப்பேரணியை கல்லூரி முதல்வர் சுமையா தாவூது தலைமை வகித்து துவங்கி வைத்தார்.வைத்தார்.கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா முன்னிலை வகித்தார்.

குடும்பகட்டுப்பாடுத்துறை இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம்,டாக்டர் ராசிக்தீன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார்,செல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட மாணவிகள் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி தாசிம் பீவி கல்லூரியில் இருந்து தொடங்கி வள்ளல் சீதக்காதி சாலை வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது.

பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,
இயற்கை வளம் மிகுந்த இந்தியாவில் மகாசக்தியாக விளங்கும் மனித சக்தியை அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்து ஆக்க வழியில் ஈடுபடுத்தினால் சுமையாக கருதப்படும் மக்கள்தொகை சொத்தாக மாறும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.