Wednesday, July 4, 2012

திமுக போராட்டம்!கீழக்கரை முன்னாள் சேர்மன் பசீர்,இளைஞரணி ராஜா உள்ளிட்டோர் கைது!


திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமநாதபுரத்தில் சுப.தங்கவேலன் தலைமையில் நடைபெற்ற‌ போர‌ட்ட‌த்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதில் கீழ‌க்க‌ரை ந‌க‌ர் திமுக‌ சார்பில் முன்னால் நக‌ராட்சி த‌லைவ‌ர் ப‌சீர்,ந‌க‌ர் இளைஞ‌ர‌ணி செயலாள‌ர் சுல்தான் செய்ய‌து இப்ராகிம் என்ற‌ ராஜா ,கென்னடி உள்ளிட்ட 12 பேரும் இதில் கைது ஆகியுள்ள‌ன‌ர்.


கைதான அனைவரும் ராமநாதபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.