Sunday, July 15, 2012

கீழக்கரை அருகே பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா !



கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்த பள்ளமோர்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை பொங்கல் வைத்து நலதிட்டங்கள் வழங்கி கொண்டாடினர்.

தில்லையேந்தல் ஊராட்சி மன்ற 1வது வார்டு கவுன்சிலரும் கிராம கல்விக்குழு தலைவருமான விஜயலட்சுமி தலைமை வகித்தார். இதில் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் முன்னிலை வகித்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷா வரவேற்றார் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பள்ளி ஆசிரியர் சுதர்ஷன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.