Sunday, July 8, 2012

கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ பெண் ஏர்வாடியில் கொலை !



ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மூதாட்டியை கொலை செய்ததாக‌ மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த சித்தி பரிதா பீவி, 65. இவர் ஏர்வாடி காட்டுப்பள்ளி அருகே தோட்டத்தில் குடியிருந்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் இறந்து கிடந்தார்.

இவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். மதுரை நகைக்கடையில் நகையை அடகு வைக்க சென்ற மூவரை, மதுரை போலீசார் சந்தேகத்தில் பிடித்து விசாரித்த போது, ஏர்வாடியில் மூதாட்டி கொலை செய்த விபரம் தெரிய வந்தது. மூவரும் ஏர்வாடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த அருணாச்சலம், 30, ராஜா, 28, மகேஸ்வரன், 32. இவர்கள், ஏர்வாடியில் வீட்டில் தனியாக இருந்த பரிதா பீவியின் முகத்தை தலையணையால் அமுக்கி, கொலை செய்துவிட்டு, 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுபோல பல இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். இரண்டொரு நாளில் பரிதா பீவியின் உடலை தோண்டி, பிரேத பரிசோதனை செய்ய, முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.