Tuesday, July 24, 2012

கீழக்கரையில் பாமாயில் சப்ளை இல்லை !கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக தலைவர் கோரிக்கை!



கீழக்கரை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த இரண்டு மாதங்களாக பாமா யில் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக பாமாயில் விநியோகம் தேவை என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக தலைவர் தமீம்தீன் கூறுகையில், “கீழக்கரையில் கடந்த இரண்டு மாதங்களாக பாமாயில் சப்ளை செய்யாமல் இருந்தனர். தற்போது (ரமலான்) நோன்பு மாதம் நடக்கிறது. முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளதால், இந்த மாதமாவது பாமாயில் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.

இதுகுறித்து நியாயவிலை கடை ஊழியர்களிடம் கேட்டபோது, “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் பாமாயில் இருப்பு இருந்தும் கூட, கடந்த இரு மாதங்களாக கீழக்கரைக்கு சப்ளை செய்யவில்லை. பொதுமக்கள் எங்களிடம் வந்து தகராறு செய்கின்றனர். பாமாயில் சப்ளை செய்யாதது ஏன் என மேலதிகாரிகளிடமே கேட்டு கொள்ளுங்கள்,” என்றனர்.

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி சுகுமாரனிடம் கேட்டபோது, “இந்த மாதம் கீழக்கரையில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் பாமாயில் சப்ளை செய்யப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.