Friday, July 13, 2012

கீழக்கரை ரோட்டரி சங்க தலைவராக ஆசாத் ஹமீது தேர்வு !



ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கீழக்கரையில் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது.

கடந்த ஆண்டின் தலைவர் செய்யது இபுராகிம் தலை மை வகித்தார். ஆர்.ஐ 3212 ன் மாவட்ட ஆளுநர் ஜெசிய வில்லவராயர், சவித்ரா ராஜாராம், மாவட்ட துணை ஆளுநர் சின்னத்துரை அப் துல்லா, கீழக்கரை பட்டய தலைவர் அலாவுதீன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

புதிய தலைவராக ஆசாத் ஹமீது, செயலாளராக சுப்பிரமணியன் ஆகியோருக்கு மாவட்ட ஆளுநர் ஜெ சிய வில்லவராயர் பதவிப் பிர மாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டய தலைவர் ரவிசந்திர ராம வன்னி, சண்முகராஜேஸ்வரன், சுகுமார், தினேஷ்பாபு, ரமேஷ்பாபு, ஜெயகுமார், செந்தில்குமார், வீரபூபதி மற்றும் கீழக்கரை சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். பட்டய செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லு�ரி ரோட் ரக்ட் சேர்மன் மரியதாஸ் தொகு த்து வழங்கினார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பாலிடெக்னிக் ரோட்ராக்ட் மாணவர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.