Saturday, July 21, 2012

கீழக்கரை மேலத்தெருவில் முபல்லிகா பட்டமளிப்பு விழா



கீழக்கரை மேலத்தெரு சீனா தானா அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் கண்ணாடிவாப்பா பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கண்ணாடிவாப்பா மன்டபத்தில் நடைபெற்றது.

சீனா தானா செய்யது அப்துல்காதர் தலைமை வகித்தார். அப்துல்மாலிக், அப்பாஸ் ஆலிம், ஜஹாங்கீர் அருஸி, ஆரிப்ஆலிம், டாக்டர் செய்யது அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக முபல்லிகா பட்டம் பெறும் மாணவி முஹம்மது ராபியத் ஷமா கிராத் ஓதி விழாவை துவக்கி வைத்தார். மாணவி முப்லிகா வரவேற்றார். அன்வர் மகளிர் அரபிக்கல்லூரி தலைமை உஸ்தாது பாத்திமுத்து ஜூஹரா, முஜமீல் ஆலிம், ஹாஜாமுகைதீன் ஆலிம், யாஸீன் ஆலிம், செய்யது முகமது ஆலிம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சீனாதானா அறக்கடளையின் நிறுவனர் செய்யது அப்துல்காதர் பேசுகையில், ‘எங்கள் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை மற்றும் உலமாக்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம். எங்கள் கல்லூரியில் மார்க்க கல்வியுடன் பள்ளி படிப்பையும் கற்றுக் கொடுக்கிறோம். உதவிக்கு 9047710890, 9626499042 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் முஹம்மது ராபியத்ஷமா, ரஹ்மத்மாயம், நஸ்மின் பாத்திமா, சீன்சிஹானா, சுஜீதாபர்வின், ஆயிசத்மர்லியா, தவ்பீக்குல் ஜன்னா ஆகியோருக்கு முபல்லிக்கா பட்டம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.