கீழக்கரையில் மீண்டும் பன்றிகள் பெருகி வருவதாகவும்.நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் அதிகரித்துள்ள பன்றிகளால் சுகாதாரகேடு அதிகரிக்கும் எனவே உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,
“கடந்த சில வருடங்களுக்கு முன் இதே போல் பன்றி களின் நடமாட்டம் அதிகளவு இருந்தது.
தொடர் புகார்களையடுத்து, அப்போதைய நகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் பன்றி வளர்த்தோர், கீழக்கரையில் இருந்து வெளியே கொண்டு சென்றனர். தற்போது மீண்டும் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கீழக்கரையில் மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்கள் வந்து பெரும்பாலான மக்கள் அவதிபட்டு வருகின்ற சூழலில், பன்றிகள் வரவு கதிகலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரில் இப்போது 50 முதல் 70 பன்றிகள் வரை சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் முன், அதிகாரிகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.