Saturday, July 28, 2012

குப்பைகிடங்கு பணி தரமில்லை! மழைக்கு அழிந்து விடும்!கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவர் தரப்பில் பதில்!






பட விளக்கம்:குப்பை கிடங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் 'ஹாலோ பிளாக்" சிமெண்ட் கல் தர‌மற்ற முறையில் எளிதில் உடைய கூடியதாக உள்ளதாக சுட்டிகாட்டுகின்றனர்.

ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ நீடித்து வ‌ரும் கீழக்கரை குப்பை கிட‌ங்கு க‌ட்டுமான‌ ப‌ணி பல்வேறு இடையூறுகளை தாண்டி த‌ற்போது வேக‌மாக ந‌டைபெற்று வ‌ருகிற‌து.க‌ட்டுமான‌ ப‌ணி நிறைவ‌டைந்தால் கீழ‌க்க‌ரை குப்பை பிர‌ச்ச‌னை சீர் செய்ய‌ப்ப‌டும் என‌ ந‌ம்ப‌ப்ப‌டுகிற‌து.


இந்நிலையில் குப்பை கிட‌ங்கு ப‌ணி த‌ர‌ம‌ற்று ந‌டைபெறுவ‌தாக‌ நகர் மன்ற கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், இடி மின்னல் ஹாஜா, சாகுல் ஹமீது, முகைதீன் இபுறாகீம், பாவா கருணை, அன்வர் அலி, தங்கராஜ் ஆகியோர் த‌ர‌ப்பில் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டுகிற‌து.

ப‌ணி ந‌டைபெறும் இட‌த்திற்கு நேரில் சென்ற இக்க‌வுன்சில‌ர்க‌ள் க‌ட்டுமான‌ ப‌ணியை ஆய்வு செய்த‌ பின்ன‌ர் மிக‌ மோச‌மாக‌ த‌ர‌ம‌ற்ற‌ ப‌ணிக‌ள் ந‌டைபெறுவ‌தாக‌ குறிப்பிட்ட‌ன‌ர்.

இது குறித்து இடிமின்ன‌ல் ஹாஜா ம‌ற்றும் முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,

70 ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ இப்ப‌ணி மிக‌ மோச‌மாக‌ ந‌டைபெறுகிற‌து. சுவ‌ர் அமைக்கும் ப‌ணி,குப்பைக‌ளை பிரிக்க‌ மேடை அமைக்கும் ப‌ணி உள்ளிட்ட‌ அனைத்து ப‌ணிக‌ளும் த‌ர‌ம‌ற்ற‌வையாக‌ உள்ள‌து.

க‌ட்டுமான‌ ப‌ணிக்கு ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டும் ஹாலோ பிளாக் சிமெண்ட் க‌ல் செங்க‌ளை விட‌ த‌ர‌ம் குறைந்த‌வையாக‌ உள்ள‌து. 5வ‌து வார்டு க‌வுன்சில‌ர் சாகுல் ஹ‌மீது கை வைத்து லேசாக‌ த‌ட்டி சோத‌னை செய்யும் போதே உடைந்து விட்ட‌து

ஒப்ப‌ந்தப்ப‌டி ஆற்றும‌ண் க‌ல‌ந்து செய்ய‌ வேண்டிய‌ சிமெண்ட் க‌ல‌வைக்கு குறுத்த‌ ம‌ண் க‌ல‌க்க‌ப்ப‌டுகிற‌து.

12mm கட்டுமான முறுக்கு கம்பிகள் உபயோக்கிக்க வேண்டிய இடத்தில் 8mm உபயோகப்படுத்தப்படுள்ளது.

குறைபாடுகளை அடுக்கி கொண்டே போக‌லாம்.இது போன்ற போலி கட்டுமானம் பலமாக காற்றடித்தாலே நிச்சயம் இடிந்து விழுந்து விடும் பலத்த மழை பெய்தால் கரைந்து விடுமோ என்று என்னும் அளவுக்கு உள்ளது .ப‌ல‌ குறைபாடுக‌ளுட‌ன் ந‌டைபெறும் இப்ப‌ணியை க‌ண்காணித்து த‌ர‌மாக‌ ந‌டைபெற‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். சிறப்பாக செய்யப்பட வேண்டிய இந்த குப்பை கிடங்கு பணியை இது போன்று குறைபாடுகளுடன் கட்டுமான பணியை நடைமுறைப்படுத்துவவ்து மனதுக்கு வேதனையளிக்கிறது .குறை சொல்வ‌து எங்க‌ள் நோக்க‌ம‌ல்ல‌ ம‌க்க‌ள் ப‌ண‌த்தை வீண‌டிக்க‌ கூடாது என்ப‌தே எங்க‌ள் விருப்ப‌ம்... இவ்வாறு அவ‌ர்க‌ள் கூறின‌ர்.


இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா தரப்பில் கேட்டபோது ,

கீழ‌க்கரையின் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அமைக்கப்படும் இந்த‌ உர‌கிட‌ங்கு ப‌ணியை வேகமாக‌ முடிக்க‌ ப‌ணிக‌ள் முடிக்கிவிட‌ப்ப‌ட்டுள்ள‌து. பல்வேறு இடையூறுகளை மீறி இப்போதுதான் பணிகள் நிறைவடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சமயத்தில் குப்பை கிடங்கு பணி நிறைவைடைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டி கேட்டு கொள்கிறேன்.பணிகள் தரமாகத்தான் நடைபெறுகிறது. க‌வுன்சில‌ர்க‌ளின் குற்றச்சாட்டு குறித்து உண்மை நிலையை ஆராய்ந்து நட‌வ‌டிக்கை எடுக்க‌ப்படும் என்றார்.


விரைவில் குப்பை கிடங்கு பணி தரமான முறையில் நிறைவடைந்து கீழக்கரையின் குப்பை பிரச்சனைக்கு நிரந்த தீர்வு வேண்டும் என்பதே கீழக்கரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.