Monday, July 16, 2012

நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா




நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்கீல் நாகராஜன் தலை மையில் நடந்தது. விழா வுக்கு கீழக்கரை நகர்மன்ற முன்னாள் தலைவர் பசீர் அகமது, சக்கரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நூர்முகம்மது,

வண்ணாங் குண்டு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் லத்தீபு, ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தலைவர் ரமேஷ்பாபு, ராமநாதபுரம் தமிழ்சங்கத் தலைவர் புலவர் அப்துல்சலாம், பொறியாளர் காதர்மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிழக்கரையை சேர்ந்த கடை உரிமையாளர் ஹிதாயத்துல்லா முதல் வியாபாரத்தை துவங்கி வைக்க, சென்னை பவர் செக்யூரிட்டி நிறுவனத்தின் இயக்குநர் முகமது காசிம் அனீஸ் பெற்று கொண்டார். விழாவில் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.