Monday, July 16, 2012

இஸ்லாமியா பள்ளி ஆண்டு விழா !அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு !


இஸ்லாமியா பள்ளிகளின் ஆண்டுவிழாவை முன் னிட்டு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கீழக்கரை தெற்குத்தெரு இஸ்லாமியா துவக்கப்பள்ளியின் 34ம் ஆண்டு விழாவும், உயர்நிலைப்பள்ளியின் 16ம் ஆண்டு விழா வும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற் றன. தெற்குத்தெரு ஜமாத் தலைவர் ஜாகிர்ஹூசைன் களஞ்சியம் தலைமை வகித் தார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார். தெற்குத்தெரு ஜமாத் டிரஸ்டி நல்லமுகமது களஞ்சியம், துணைத்தலைவர் புகாரி, கல்வி அபிவிருத்திக்குழு உறுப்பினர் உமர் களஞ்சியம், இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இபுராகிம், வழக்கறிஞர் நாகராஜன், கீழக்கரை நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் முகமது காசிம், முகமது ஜமால் முன்னிலை வகித்தனர்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற. பள்ளியில் கடந்த ஆண்டு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் தாளாளர் முகைதீன் இபுராகிம் பரிசு வழங்கி பாராட்டினார். முன்னதாக, கோவை காவல்துறை (ஆயுதபடை) உதவி ஆய்வாளர் முகமது அனஸ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.