Wednesday, July 18, 2012

கீழக்கரையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கு சென்னை உயர் நீதிமன்ற‌ நீதிபதி பரிசு!


கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் விளையாட்டு மற்றும் ஆண்டுவிழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தெற்குதெரு ஜமாத் டிரஸ்டி நல்ல முகம்மது களஞ்சியம் தலைமை வகித்தார். கல்வி அபிவிருத்திகுழு பொருளாளர் புஹாரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் வரவேற்றார்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன்,மற்றும் அவரது மனைவி மற்றும் தெற்குத்தெரு ஜமாத் தலைவர் ஜாஹிர் ஹீசைன் களஞ்சியம்,கல்வி அபிவிருத்தி குழு உறுப்பினர் உமர் களஞ்சியம் முன்னிலை வகித்தனர்.


பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் பேசுகையில் ,
கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவியின் +1 மற்றும் +2விற்கான அனைத்து கல்வி செலவுகளையும் பள்ளி நிர்வாகமே ஏற்று கொள்வதாக அறிவித்தார்.

பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவியருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரிசு வழங்கி பாராட்டினார்.

இஸ்லாமியா மெட்ரிக் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.