Sunday, July 15, 2012

கீழக்கரையில் தொடரும் கைது !கடல் அட்டை தடை குறித்த ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ வாக்குறுதி செயல்படுத்தப்படுமா?




மத்திய அரசால் கடல் அட்டை பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் அட்டை வைத்திருந்தார்கள் என பலரும் கைது செய்யப்படும் நிலையில் கீழக்கரையில் 10 கிலோ கடல் அட்டை வைத்திருந்தாதாக‌ கீழக்கரை சிறு தொழில் மீனவர் சங்க நிர்வாகி அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளார்.

க‌ட‌ல் அட்டை த‌டை குறித்து மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கடல் அட்டை தொடர்பாக தொடரும் கைது குறித்து சமூக நல அமைப்பை சேர்ந்த தங்கம் ராதாகிருஸ்னன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.



இது குறித்து ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் நிர்வாகி த‌ங்க‌ம் ராதா கிருஸ்ண‌ன் கூறுகையில்,


க‌டல் அட்டை த‌டையை நீக்குவ‌து தொட‌ர்பாக‌ சென்ற‌ திமுக‌ ஆட்சியில் அமைச்ச‌ர் சாமி முய‌ற்சிக‌ள் மேற்கொண்டு வ‌ந்தார்.த‌ற்போது உள்ள‌ எம் எல் ஏ ஜ‌வாஹிருல்லாவும் த‌டையை நீக்குவ‌தாக‌ தேர்த‌ல் வாக்குறுதி அளித்த‌தோடு அத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்து வ‌ந்தாதாக அறிந்தோம்.த‌ற்போது என்ன‌ ஆயிற்று என்று தெரிய‌வில்லை.கடல் அட்டை வைத்திருப்பது கிரிமினல் குற்ற‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்ய‌ப்ப‌டுவ‌து மிக‌வும் வேத‌னைய‌ளிக்கிற‌து.அர‌சாங்க‌ம் உட‌ன‌டியாக‌ க‌ட‌ல் அட்டைக்கான‌ த‌டையை நீக்க‌ வேண்டும்


கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கத்தின் சார்பாக‌ அர‌சுக்கு விடுத்துள்ள‌ கோரிக்கையில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,


கடல் அட்டைகள் எளிதில் அழியக்கூடிய இனம் அல்ல என ஜெனிவா சர்வதேச ஆய்வு மையம் கூறுகிறது.ஒரு கடல் பெண் அட்டை 6 மாதத்திற்கு 10 லட்சம் குஞ்சுகள் வீதம் வருடத்திற்கு 20 லட்சம் குஞ்சுகள் பொறித்து இனவிருத்தி செய்கிறது. என மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கழகம் கூறுகிறது.

மேலும் கடல் அட்டையில் வெள்ளை,சிகப்பு ,கருப்பு என மூன்று வகைகள் உண்டு இவை சிறந்த சத்தான உணவாகும் மருத்துவ குணம் உடையது.போதை தன்மை கிடையாது ஆகவே மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு கடல் அட்டையின் தடையை நீக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் மாநில அரசுக்கும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.