Friday, October 11, 2013

கீழக்கரையில் (15/10/2013செவ்வாய்)மழை வேண்டி ஹமீதியா விளையாட்டு மைதானத்தில் தொழுகை!


ராமநாதபுரம் ,பணைக்குளம்,பரமக்குடி கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை இன்றி கிணறுகள் வற்றி தண்ணீர் இன்றி சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர் மழை வேண்டி சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை தொழுகை நடைபெற்றது.

சமீபத்தில் பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் தொழுகை நடைபெற்றது.ஏராளமான மக்கள் பங்கேற்றனர் 

இந்நிலையில் கீழக்கரை மேலத்தெரு உஸ்வது ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பில் மேலத்தெரு ஹமீதியா பெண்கள் விளையாட்டு மைதானத்தில் 15/10/2013 செவ்வாய்கிழமை காலை 9 மணியளவில் மழை வேண்டி  தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து ஜமாத்தார்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.