Wednesday, October 30, 2013

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாடிகளில் தோட்டம்! தோட்டக்கலைத்துறை ஆலோசனை!

Photo Thanks: chennai.olx

மொட்டை மாடிகளில் தோட்டம் அமைக்கலாம்
கீழக்கரை பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகரில் வீடுகள் நெருக்கமாக உள்ளதால் மரங்கள் வளர்பதற்கு வாய்ப்பில்லை. தற்போது நகருக்கு வெளியே தோட்டங்களில் உள்ள மரங்களை அழித்து வீட்டடிமனைகளாக விற்பனை செய்கின்றனர். இதனால் மழை குறைந்து நிலத்தடி நீர் இறங்கி கிணறுகள் வறண்டுவிட்டன.
கீழக்கரையில் பெரும்பாலான வீடுகளில் மொட்டை மாடி இருப்பதால் அதில் காய்கறி மற்றும் கீரைத் தோட்டம், மலர் தோட்டம் அமைக்கலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறுத்து தோட்டக்கலை அலுவலர் தெரிவித்ததாவது:
மாடியில் மட்டுமல் லாது வீட்டில் எந்த இடத் தில் சூரிய ஒளி கிடைக்கிற தோ அங்கெல்லாம் காய்கறி செடிகளை வளர்க்க முடி யும். வீட்டு தோட்டத்தில் இரண்டு முறை உண்டு. நிழல்வலை குடில் அமைத்து தோட்டம் போடலாம். திறந்த வெளியில் தோட்டம் அமைப்பது மற்றொரு முறை. நிழல் வலைக்குள் செடிகளை வளர்க்கும் போது தண்ணீர் எளிதில் ஆவியாவது இல்லை. மேலும் பூச்சிகளும் தாக்கமுடியாது.
தோட்டகலைத்துறை விளக்கம்
மாடியில் மட்டுமல் லாது வீட்டில் எந்த இடத் தில் சூரிய ஒளி கிடைக்கிற தோ அங்கெல்லாம் காய்கறி செடிகளை வளர்க்க முடி யும். வீட்டு தோட்டத்தில் இரண்டு முறை உண்டு. நிழல்வலை குடில் அமைத்து தோட்டம் போடலாம். திறந்த வெளியில் தோட்டம் அமைப்பது மற்றொரு முறை. நிழல் வலைக்குள் செடிகளை வளர்க்கும் போது தண்ணீர் எளிதில் ஆவியாவது இல்லை. மேலும் பூச்சிகளும் தாக்கமுடியாது.
பொதுவாக திறந்த வெளியில் வளர்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். சாதாரண பாலித்தீன் பைகளில் செடிகள் வளர்க்கும்போது நாளடைவில் அவை வெப்பத்தால் இளகி வளைந்து நீர்கசிவை ஏற்படுத்தும். ஆனால் யூவி பாலித்தீன் என்ற பிரத்யேக பைகள் மூன்றாண்டுவரை தாக்கு பிடிக்கும்.
வெங்காயம், உருளைக்கிழங்கு தவிர மற்ற அனை த்து காய்கறிகளையும் வீட்டு மொட்டை மாடி தோட்ட த்திலேயே சாகுபடி செய்ய லாம். இதற்கு அதிகளவு இடமும் தேவையில்லை. 200 சதுர அடி இடமே போதுமானது. மாடி வீட்டு தோட்டத்தில் மறந்துகூட ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன் படுத்தக்கூடாது.
பூச்சி விரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கிகள் என்று அனைத்தையுமே இயற்கையான முறையில் நீங்க ளே தயாரிக்கலாம். அல்லது தரமான கடைகளில் வாங் கியும் பயன்படுத்தலாம். சொட்டு நீர் அமைப்பதை விடுத்து நாமே தினமும் தண்ணீர்விடும்போது நமக்கும் செடிகளுக்குமான உறவு பலப் படும். கூடவே மனது க்கு உற்சாகமும், நிம்மதியும் கிடைப்பதோடு உடற்பயிற்சியாகவும் அமை ந்து உடலுக்கு வலு சேர்க்கும்.
மாடி தோட்டம் மூலம் தினமும் 200 முதல் 300 கிராம் காய்கறிகள் பெற முடியும். மாடித்தோட்டம் அமைக்க முன்வருவோரு க்கு 50 சதவீத மானியத்தில் வீரிய ஒட்டுரக கத்தரிகாய், வெண்டைக்காய், தக்காளி மற்றும் பாகற்காய், புடலங் காய், பீக்கங்காய் போன்ற விதைகள் மற்றும் கீரை விதைகள் திருப்புலாணி மற்றும் ராமநாதபுரம் தோட்டகலை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
கலவை உரங்களுக்கு தேவையானவை செம்மண், குப்பை, தொழுஉரம், ஆட்டுஉரம், மணல். செடி வளர் ந்த பிறகு பயிர்பாதுகாப்பு மருந்தான வேப்பம் புண் ணாக்கு அல்லது சூடம் மோனாஸ் வேருக்கடியில் வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை மண்புழு உரம் அவசியம் வைக்க வேண் டும். மண்புழு உரம் ராமநாதபுரம் வேளாண் அறிவியல்துறை அலுவலகத்தில் கிலோ ரூ.5க்கு விற்கப்படுகிறது. 

தண்ணீர் கசிவு ஏற்படாத வண்ணம் மக்கிய தென்னை நார் கழிவுகளால் ஆன கிட் நான்கு செடிகள் வளர்க்கலாம்.
ராமநாதபுரம் பாரதி யார் தெரு கவிதாஜெயராமன் கூறுகையில்,
‘மாடி தோட்டத்தில் பீக்கங்காய், பாகற்காய், வெண்டைகாய் மற்றும் கீரைவகை செடிகள் அமைத்துள்ளேன். இதனால் எங்கள் வீட்டு காய்கறி தேவை பூர்த்தியாகிறது’ என்றார்.
கீழக்கரையை சேர்ந்த ராஜா என்பவர் கூறியதாவது,
கீழக்கரையில் எங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்தேன்.ஆனால் நல்ல தண்ணீர் ஊற்ற வேண்டியுள்ளது.இல்லையென்றால் செடிகள் வாடி விடுகிறது.பராமரிக்க முடியவில்லை.இது குறித்து தோட்டக்கலைதுறை சந்தேகங்களை தீர்த்தால் இத்திட்டம் வளர்ச்சி பெறும் என்றார்
திருப்புல்லாணி தோட் டகலை அலுவலர் அழகே சன் கூறுகையில்,
 ‘மாடி தோட்டம் அமைப்பவர்கள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு காங்கிரீட் துருபிடித்து விடும் என்று எண்ணினால் பிளாஸ்டிக் பேப்பர் வாங்கி பைப் அருகில் விரித்து அதற்கு மேல் செடி தொட் டிகளை வைக்கலாம்.
தண்ணீர் கசிவு ஏற்படாத வண்ணம் மக்கிய தென்னை நார் கழிவுகளால் ஆன கிட் ஒன்று ரூ.100க்கு ராமநாதபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் விற்கப்படுகிறது. இதில் நான்கு செடிகள் வைக்கலாம்.
இதன் மூலம் ராமநதபுரத்தில் அதிகமானோர் மாடி தோட்டம் அமைத்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு 00 91 80 98 275927 எண்ணில் தோட்டகலை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

  1. ஆசைப்படுங்கள், உங்கள் வீட்டிலும் இப்படி அருமையாக செடி வளர்க்க வேண்டுமென ...!!

    . ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்
    www.99likes.blogspot.com

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.