Friday, October 18, 2013

கீழக்கரையில்(18/10/13) மழை பொழிந்தது !




இன்று பெய்த மழை


கீழக்கரையில் இன்று நள்ளிரவில் சிறிது நேரம் தூறல் மழை பெய்தது.பின்னர் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையின்றி நீர் வளம் குறைந்து கிணறுகள் வற்றி கடும் வறட்சி நிலவி வந்ததது.இதனையடுத்து பல்வேறு ஊர்களிலும் மழை வேண்டி தொழுகை நடைபெற்றது.
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை தொழுகை

 பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் மழை தொழுகை

மேலத்தெரு உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்கம் சார்பில் மழை தொழுகை

 கீழ‌க்க‌ரை ந‌க‌ரிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும்,பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பிலும்,மேலத்தெரு உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்கம் சார்பில் மழை வேண்டி  ஏராளமானோர் பங்கேற்ற மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மழையானது நள்ளிரவில் சிறிது நேரம் தூறியது.இத‌னால் ந‌க‌ரில் நில‌வி வ‌ந்த‌ உஷ்ன‌ம் தணிந்துள்ள‌து.பின்னர் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது.

தொடர்ந்து நல்ல மழை பெய்ய வேண்டும் என பொதுமக்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி பிரார்த்தனைகளையும் தொடர்ந்து  வருகிறனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.