Friday, October 11, 2013

கீழக்கரையில் காஸ் விற்று காசு சம்பாதிக்கும் கும்பல்! காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! பொதுமக்கள் பெரும் அவதி


கீழக்கரை பகுதியில் காஸ் சிலிண்டர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.இங்குள்ள சேது காஸ் ஏஜென்சியில் 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம்  சப்ளையோ குறைவு டிமாண்ட் அதிகம் இதில் கீழக்கரையில் காஸ் பதுக்கல், வாங்கி விற்பது போன்ற வேலைகள் அதிகரித்திருக்கின்றன.
இதனால் காஸ் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதுகுறித்து கீழக்கரை கிளாஸிபைட் எஸ்.கே.வி சேக் கூறியதாவது,
காஸ் தேவைக்கு பதிவு செய்து 2 மாதங்களாகியும் கிடைப்பதில்லை.ஏஜென்சிக்கு போன் செய்தால் முறையான பதில் இல்லை.ஓட்டல் பேக்கரி போன்ற சில வர்த்தக நிறுவனங்கள்,சில மினி வேன்,ஆட்டோக்களில் வீ்ட்டு உபயோக சிலிண்டர்களை தயக்கமின்றி பயன்படுத்தப்படுகின்றன.






புதிதாக காஸ் கனெக்சன் பெற்ற சிலர் தங்கள் பெயரில் சிலிண்டர்களை பதிவு செய்து வாங்கி விற்கும் தொழிலும் கனஜோராக நடைபெறுகிறது.
 இதனால் கீழக்கரை பகுதியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சி்னையாக மாறி வருகிறது.
 காஸ் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்று சம்பாதிப்பதை சிலர் முழு நேர தொழிலாகவே நடத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன .வசதி படைத்தவர்கள் சில நூறு ரூபாய்களை அதிகம் கொடுத்து வாங்கி விடுவர் வசதி இல்லாதோர் பாடு திண்டாட்டம் தான.இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பேரசன் உயர் அதிகாரிகளைடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையு்ம் இல்லை உடனடி நடவடிக்கை எடுத்தாலதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியு்ம் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.