Saturday, October 26, 2013

கேஸ் சிலிண்டர் திருடியதாக ஒருவர் கைது !ஆம்னி வேன் பறிமுதல்!

கீழக்கரையில் கேஸ் சிலிண்டர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கீழக்கரை காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது,
கீழக்கரையில் வீட்டு உபயோக சிலிண்டர்களை வீடுகளுக்கு சப்ளை செய்வதற்கு ஒவ்வொரு தெருவிலும் ரோட்டின் ஓரத்தில் இறக்கி வைப்பது வழக்கம். நேற்று சின்னகடைத்தெரு கோவிந்தராஜ் கடை அருகில் சிலிண்டர்களை இறக்கி வைத்து, டெலிவரிமேன் கணேசன் வீடுகளுக்கு எடுத்துச்சென்றார். சிலிண்டரை ஒரு வீட்டுக்கு எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு வரும்போது காஞ்சிரங்குடியைத் சேர்ந்த  நசுருதீன்(32) அங்கிருந்த சிலிண்டரை திருடி அவருக்குச் சொந்தமான ஆம்னி வேனில் ஏற்றினார். அப்போது டெலிவரிமேன் கணேசன் அவரை கையும் களவுமாக பிடித்து கீழக்கரை போலீசில் ஒப்படைத்தார்.
 இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து நசுருதீனை கைது செய்து, அவரது ஆம்னி வேனை பறிமுதல் செய்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.