Thursday, October 10, 2013

கார் விபத்து!ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ காயமின்றி தப்பினார் !



காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் கூட்டுரோடு அருகே ராமநாதபுரத்திலிருந்து சென்னை சென்ற, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கார்  விபத்துக்குள்ளானது. இதில் எம்.எல்.ஏ.,  காயங்களின்றி உயிர் தப்பினார். பின்னர் மற்றொரு கார் மூலம் அவர் சென்னை புறப்பட்டார்.

இது குறித்து தமுமுக தலைமையகத்திலிருந்து வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் ..

 மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக வரும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் கார் விபத்துக்குள்ளானது. இறைவனின் கிருபையால் பேராசிரியர் அவர்கள் நலமுடன் உள்ளார்கள். எந்த பாதிப்பும் இல்லை. காரை ஓட்டி வந்த டிரைவர் ஆதில் அவர்களுக்கு காது அருகில் லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நலமுடன் உள்ளார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.