Friday, October 18, 2013

கீழக்கரை (மணல்மேடு) கண்காட்சி திடலில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!சுகாதார நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த கோரிக்கை!


 நுழைவு பகுதி

 குவிந்திருக்கும் குப்பைகள்







கீழக்கரையில் பெருநாளையோட்டி நடைபெறும் (மணல்மேடு) கண்காட்சி திடலில் சுகாதாரம்,பாதுகாப்பு ,ஆம்புலண்ஸ் ஏற்பாடு உள்ளிட்டவைகளை செயல்படுத்த வேண்டி கீழக்கரையின் சமூக ஆர்வலர்கள் சதக் இப்ராஹிம் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கண்காட்சி திடலில் முதல் முறையாக ஆம்புலண்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து சமூக ஆர்வலர் சதக் இப்ராஹிம் கூறுகையில்,


ஆம்புலண்ஸ் ஏற்பாடுகளை செய்தமைக்கு நிர்வாகத்திற்கும் ,முஸ்லிம் டிரஸ்டிற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

ஆனால் சுகாதார நடவடிக்கையில் ஏதும் முன்னேற்றம் இல்லை.குப்பைகள் பெட்டிகள் முறையாக இல்லாததால் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன.இதன் மூலம் நோய் பரவும் வாய்ப்புகள அதிகம்.எனவே நிர்வாகம் உடனடியாக அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இனி வரும் காலங்களில் கடைகளை வைத்திருப்போர் கட்டாயம் குப்பை பெட்டிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் அதே நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.