Monday, October 21, 2013

பெரியபட்டிணத்தில் பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி! கீழக்கரை டவுன் காஜி திறந்து வைத்தார்!





ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்த பெரிய பட்டிணத்தில் தக்வா நகரில் கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் மஸ்ஜில் தக்வா வை கீழக்கரை டவுன் காஜி மெளலவி காஜி ஏ.எம்.எம்.காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்தீகி திறந்து வைத்து மஃரிப் தொழுகை நடத்தினார்.

திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.கபீர் தலைமை வகித்தார்.ஜலால் ஜமால் பள்ளி தலைவர் அப்துல் லத்தீப்,அல் மஸ்ஜிதுல் தலைவர் ஜீனத் முன்னிலை வகித்தனர்.தொடக்கமாக ஏ.எம்.கே செய்யத் அஹம்து நெய்னா ஜமாலி கிராஅத் ஓதினார்.அமீரக பெரியபட்டிணம் ஜமாத் பைத்துல்மால் தலைசர் ஜஹாங்கிர் வரவேற்றார்.

மெளலவி செய்யது அக்பர் ஜமாலி,மெளலவி முஹம்மது ஜாபர் சிறப்புரை நிகழ்த்தினர்.ஒன்றிய கவுன்சிலர் ஹபீபுல்லாஹ்,மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் செய்யது அஹமது புஹாரி உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஜமாத்தார்கள் உலமாக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அல் மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளி இமாம் ஹாபிஸ் முஹம்மது இஸ்மாயில் மன்பஈ துஆ ஓதினார்.






No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.