Monday, October 28, 2013

கீழக்கரை கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பறிமுதல்! நகராட்சி நடவடிக்கை!

பழைய படம்(பைல் படம்)
சுற்றுசூழல் பாதிப்பை கருத்து கொண்டு பல வேறு நகரங்களில் பை உள்ளிட்ட பாலிதீன் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழக்கரை நகராட்சியிலும் பாலிதீன் பயன்பாடு  தடை செய் யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடைகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து நகர சபை ஆணையாளர் அயூப் கான் தலைமையில் சுகாதார அலுவலர் திண்ணாயிர மூர்த்தி மற்றும் பணியாளர் கள் நகர் முழுவதும் பல்வேறு கடைகளில்  சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சில கடைகளில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ பாலிதீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைக் காரர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
எச்சரிக்கை
சுற்றுசூழல் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தை மனதில் கொண்டு பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்பாட்டை குறைப்பதில் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இனி இதுபோல் கீழக்கரை நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகளை பயன்படுத்தும் கடைக்காரர்கள் மீது மிக அதி கப்படியான தொகை அப ராதமாக விதிக்கப்படுவதோடு சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.