Tuesday, October 15, 2013

கீழக்கரை ஹமீதியா மைதானத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது!






ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது.மழை இல்லாத்தால் கிணறுகள் வறண்டு தண்ணீருக்கு கடும் சிரமம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் மற்றும் பழைய குத்பா பள்ளி சார்பிலும் தொழுகைகள் நடத்தப்பட்டு உள்ளன. 
இந்நிலையில் இன்று காலை கீழக்ககரை மேலத்தெரு உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு மழை வேண்டி சிறப்பு தொழுகை ஹமீதியா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை முதல் கீழக்கரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுவர் முதல் பெரியவர் வரை தொழுகையில் பங்கேற்க ஏராளமானோர் குவிந்தனர்.இதனை தொடர்ந்து தொழுகை நடத்தப்பட்டு துஆ செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.