Thursday, October 31, 2013

"அன்பின் முகவரி" பி.எஸ்.அப்துர்ரஹ்மானுக்கு மத்திய அரசின் உயர் விருது வழங்க கோரிக்கை!

 சத்யபாமா பல்கலைகழகத்தின் மூலம் டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட போது
 பிஎஸ்.ஏ அப்துர்ரஹ்மான் வீட்டிற்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வருகை தந்த போது எடுத்த படம்
 தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் (பழைய படம்)
 யுஏயில் முன்னாள் பிரதமர் வருகை தந்த போது பிஎஸ்ஏ அப்துர் ரஹமான் வரவேற்ற போது எடுத்த படம் அருகில் ஈடிஏவின் மேலாண்மை இயக்குநர் செய்யது எம் சலாஹீதீன்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன்

 முன்னாள் ஜனாதிபதி  வெங்கட்ராமன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கீழக்கரை வருகை தந்த போது இளநீருடன் வரவேற்பு

கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாள‌ர் த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன் 

வெளியிட்டுள்ள செய்தியில்..

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இந்திய தொழிற்துறையின் முன்னோடியும்தமிழகத்தில்பெரும்செல்வாக்குகொண்டவரும், தயாளகுண சீலருமான சேனா ஆனா  என்று அழைக்கப்படும் வள்ளல் பி. எஸ். அப்துர்ரஹ்மான்  ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும்ரியல் எஸ்டேட், கட்டுமாணம் மற்றும் வர்த்தக துறைகளில் மிகவும் சக்தி வாய்ந்த .டி. அஸ்கான் மற்றும் ஸ்டார் குழும நிறுவனங்களின்  நிறுவன பங்குதாரரும், துணை தலைவரும் ஆவார்.

பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராகவும், தமிழகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிறுவனராகவும், காப்பாளராகவும் இருந்து வருகிறார். கல்வி, தொழில், சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் சார்ந்த துறைகளில் இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம்,இவருக்கு  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி,
முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர்  ,கலைஞர் இன்றைய முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புடன் திகழ்ந்தவர்.
இவர் வறட்சியான மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுநலன்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளார்.இவரின் சேவைகளுக்கு அளவில்லை. இம்மாமனிதருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கி கெளவரவிக்க வேண்டும்.மேலும் அவர் நல்ல உடல் நலத்துடன்  நீண்ட ஆயுளுடன் வாழ தலை வணங்கி வேண்டுகிறேன். 


எங்கள் சமூக நல நுகர்வோர் அமைப்பின் 6வது நிறைவு விழா கோரிக்கையாக பத்ம பூசன் விருது மாமனிதர் பிஎஸ்.ஏ ரஹ்மானுக்கு வழங்கவேண்டும்   என சமூக நல அமைப்பின் சார்பாக கேட்டு கொள்கிறேன.இம்மாவட்டத்தின் எம்பி எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் நல பிரநிதிகளை சந்தித்து இக்கோரிக்கை குறித்து வலியுறுத்த உள்ளோம் இவ்வாறு அவர் செய்தி வெளியிட்டுள்ளார்.




2 comments:

  1. திரு. தங்கம் ராதாகிருஷணன் அவர்கள் கூறிய கருத்தினை வரவேற்கிறேன். இக்கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது என் வேண்டுகோள்!
    - துபாயிலிருந்து திருச்சி சையது

    ReplyDelete
  2. Allah ivarhaluku neenda ayulai tharuvanga ameen

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.