Wednesday, August 29, 2012

நாளை(30-08-02) அப்துல் ரஹ்மான்.எம்.பி கீழக்கரை வருகை!முஸ்லீம் லீக் சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!






கீழக்கரைக்கு நாளை காலை காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கினைப்பாளர் அப்துல் ரஹ்மான்.எம்.பி வருகை தர இருப்பதை தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கீழக்கரை கிளை சார்பாக பிரமாண்ட வரவேற்பு ஏறபடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நகரெங்கும் முஸ்லீம் லீக் சார்பாக பிளக்ஸ் போர்டு விளம்பரங்கள்,கொடி தோரணங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை வரும் அப்துல் ரஹ்மான்.எம்பி நாளை 5க்கு மேற்பட்ட் இடங்களில் கொடியேற்றி வைத்து பேசுகிறார்.

மாவட்ட நிர்வாகிகளில் ஒத்துழைப்போடு கீழக்கரை நகர் முஸ்லிம் லீக் சார்பில் நிர்வாகிகளில் ஒருவரான‌ லெப்பை தம்பி தலைமையில் ஏராளமான இளைஞர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.