Saturday, August 18, 2012

கீழக்கரை கடற்கரையில் குப்பை தொட்டிகள் அகற்றம்!தொடரும் நடவடிக்கை!



கீழக்கரை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் பல ஆண்டுகளாக கிடந்த குப்பைபைகள் அகற்றப்பட்டு கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.ஆனால் கடற்கரையோரம் குப்பை தொட்டிகள் அகற்றப்படாமல் இருந்து வந்தது.இதனால் சிலர் அதில் குப்பைகளை கொட்டியதால் குப்பை தொட்டி நிறைந்து மீண்டும் குப்பைகள் குவியும் சூழ்நிலை ஏற்பட்டது .இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்த‌ பலரும் குப்பை தொட்டிகளை அகற்றுவதற்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் நகராட்சியில் அலுவலர் மனோகரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கனரக வாகனம் மூலம் அங்கிருந்த குப்பை தொட்டிகளை அகற்றினர்.

தற்போது ஒரு குப்பை தொட்டி மட்டும் அங்கு உள்ளது.ஓரிரு நாட்களில் அதுவும் அகற்றப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.