Monday, August 20, 2012

கீழக்கரையில் பல்வேறு இடங்களில் ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது !





கீழக்கரை ஈதுல் பித்ரு பெருநாள் தொழுகை நகரில் உள்ள தொழுகை பள்ளிகள் மற்றும் திடல்களிலும் நடைபெற்றது.

நடுத்தெரு ஜீம்மா பள்ளியில் டவுன் காஜி காதர் பக்ஸ் தொழுகை நடத்தினார்.தெற்குதெருவில் செய்யது முகம்மது ஆலிம் தொழுகை நடத்தினார்.மேலத்தெரு புது பள்ளியில் கத்தீப் மன்சூர் ஆரிப் ஆலிம் ,ஓடக்கரை பள்ளியில் முகம்மது ஆரீப் ஆலிம் மற்றும் அப்துல் சலாம் ஆலிம், பழைய குத்பா பள்ளியில் ஹைதர் அலி ஆலிம்,மின் ஹாஜியார் பள்ளியில் சாகுல் ஹமீது ஆலிம்,கிழக்கு தெரு பள்ளியில் அப்துல் பாசித் பயான் கூற சம்சுதீன் ஆலிம் தொழுகை நடத்தினார்.வடக்குத்தெரு பள்ளியில் கத்திப் சாகுல் ஹமீது ஆலிம்,
கிழக்குதெரு கே.ஈ.சி.டி சார்பில் அபூபக்கர் ஆலிம் தொழுகை நடத்தினர் வடக்குதெரு நாசா சமூகநல அமைப்பு சார்பிலும் தொழுகை நடைபெற்றது.மேலும் பல்வேறு இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையில் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.