Friday, August 24, 2012

முஸ்லீம் லீக் வ‌ள‌ர்ச்சியில் கீழ‌க்க‌ரையின் ப‌ங்கு ம‌க‌த்தான‌து!மாநில‌ பொருளாள‌ர் ஷாஜ‌கான் பேச்சு




கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழக்கரை வருகை தர இருக்கும் அப்துல் ரஹ்மான்.எம்பி வரவேற்பளிப்பது குறித்தும்,கீழக்கரை நகரின் வளர்ச்சி குறித்தும் ,கட்சியின் வளர்ச்சி பணி குறித்தும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் ஷாஜகான் தலைமை வகித்தார்.ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ,கீழக்கரை நிர்வாகிகள் லெப்பை தம்பி,கமருஸ்சமான்,அபுபக்கர் மற்றும்அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் ஹமீது ரஹ்மான்,குத்புதீன் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் அப்துல் ரஹ்மான்.எம்பிக்கு சிறப்பான வரவேற்பளிப்பது என்றும்,இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கீழக்கரை கிளையை பலப்படுத்துவது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில பொருளாளர் ஷாஜாகான் பேசுகையில் ,
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் வளர்ச்சியில் கீழக்கரையின் பங்கு மகத்தானது.இன்ஷா அல்லா கீழக்கரையை மிக பலமிக்க முஸ்லீம் லீக்கின் கோட்டையாக மாற்றுவதற்கு உண்டான முயற்சியில் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.மேலும் கீழக்கரை வழியாக‌ புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.முஸ்லீம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.கீழ‌க்க‌ரை வ‌ருகை த‌ரும் அப்துல் ர‌ஹ்மான் எம்பிக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பை த‌ருவோம் என்றார்.

பின்னர் மாநில பொருளாளர் ஷாஜகானை மாசா சமூக‌ ந‌ல‌ அமைப்பின் நிறுவ‌ன‌ர் இப்திகார் ம‌ற்றும் முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ச‌ந்தித்த‌ன‌ர்.




No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.