Wednesday, August 29, 2012

மின்ஹாஜியார் ப‌ள்ளிவாச‌ல் அருகே சுகாதார‌ கேடு!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை!




செய்தியாளர்: சேகு சதக் இப்ராஹிம்

கீழக்கரை 10 வார்டு பகுதியில் மின் ஹாஜியார் பள்ளி முன்பு ஓடும் கழிவு நீரால் பள்ளிக்கு தொழுகைக்கு வருபவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பாக உள்ளது இதுபோல் அடிக்கடி நிகழ்வதால் பெரும் சிரமமாக உள்ளது எனவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியை சேர்ந்த ஜமாத்தார்கள் கூறுகின்றனர்.

அதே போல் இந்த பகுதியில் சேரான் தெருவில் கடற்கரை பகுதி புதிய பாலம் செல்லும் வழியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரம் சீர்கேடு ஏற்படு நிலை உள்ளது
இது பற்றி அப்பகுதி காதர் கூறுகையில் இப்பகுதி ஒதுக்கு புறமாக இருப்ப‌தால் கவ‌னிப்பார‌ற்று கிட‌க்கிற‌து இங்கு தொடர்ச்சியாக‌ குப்பை அகற்றப்படுவதில்லை என்றாவது ஒரு முறைதான் அகற்றப்படுகிறது,உடனடியாக வார்டு மெம்பரும் நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.


`

1 comment:

  1. FOR PAST SEVERAL YEARS NO STEPS ARE TAKEN FROM GOVT. OFFICIAL AND ALSO WEEKLY ONCE OR TWICE IN A WEEK THEY ARE CLEANING THIS AREA. PEOPLES IN THIS AREA ARE MOSTLY AFFECTED FROM SEVERAL DISEASES AND SPENDING MONEY FOR MEDICAL PURPOSES ONLY.
    BETTER THEY SHOULD NOT PAY TAX FOR THEY LAND

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.