Thursday, August 2, 2012

கீழக்கரையில் முஹ்யித்தீனியா பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி !


கீழக்கரை வடக்குதெரு முஹ்யித்தீனியா பள்ளி மற்றும் திருப்புல்லாணி அரசு ஆரம்ப
சுகாதார நிலையம் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


பள்ளி முதல்வர் ரஹ்மத்நிஷா தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.கீழக்கரை காவல்துறை எஸ்.ஐ பால்ராஜ்,திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதாரதுறை மருத்துவர் ராசீக்தீன்,சுகாதாதுறை ஆய்வாளர் செல்லக்கண்ணு முன்னிலை வகித்தனர்.

பேரணி வடக்குத்தெரு பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு பல்வேறு தெருக்களில் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இதில் ஏராள‌மான‌ மாண‌வ‌ர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய‌ பதாகைகளுடன் கலந்து கொண்டனர் ம‌ற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.