Sunday, August 5, 2012

கீழக்கரை சதக் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம்!


கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். என்.எஸ்.எஸ்., மற்றும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம், இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா தலைமையில், முதல்வர் முகம்மது ஜகபர் முன்னிலையில் நடந்தது.

மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் வரவேற்றார்.கணினிப் பொறியியல் துறை தலைவர் கார்த்திகேயன், முகம்மது யூசுப், நிர்வாக அதிகாரி பெரியசாமி, உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முத்துவேல் பங்கேற்றனர். திட்ட அலுவலர் சிவபாலன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.