Friday, August 31, 2012

கீழக்கரை கல்லூரியில் சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு விருது !


பட விளக்கம்:-கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா பள்ளி ஆசிரியை மெஹராஜ் சிறந்த ஆசிரியைக்கான விருது பெற்றார்

ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதி அரசு பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கீழக்கரையில் நடைபெற்றது. ராமநாதபுரம், கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ரோட்ராக்ட் ஆகியவை இணைந்து முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். தாளாளர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க துணை ஆளுநர் சின்னதுரை அப்துல்லா, தலைவர் ரமேஷ் பாபு, முன்னாள் துணை ஆளுநர் சண்முக ராஜேஸ்வரன், செயலாளர் ஜெயகுமார், பட்டய செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினர்.

நிகழ்ச்சியில், ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் ஆரோக்கியம், செல்வகுமார், மெஹராஜ், ஆனந்தி பிரேமா(ஜீ டிவி விவாதத்தில் பங்கேற்றவர்), மரியதாஸ் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது.

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 31, 2012 at 7:51 PM

    துரோணச்சாரியார் விருது பெற்ற நமது நகரை சார்ந்த அனைத்து ஆசிரியர் பெரு மக்களையும் உளமார பாராட்டுகிறோம்.

    இவர்களின் மரியாதைகுரிய சேவை மென்மேலும் தொடர்ந்து மூத்த சகோதரர் டாகடர் எ.பி.ஜே. அபுல் கலாம் (முன்னால் குடியரசு தலைவர்) அவர்களின் கனவுத் திட்டமான இந்தியா - 2020 க்கு ஏற்ப மாணவச் செல்வங்களை உருவாக்க மனமகிழ்ந்து வாழ்த்தி இறைவனிடத்தில் பிரார்த்திக்கின்றோம்.

    ஜனாபா. மெஹராஜ் (சதகத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளி) திருமதி. மஹ்தூமியா தொடக்கப் பள்ளி)இருவரும் அரசு உதவி பெரும் பள்ளிகளை சார்ந்தவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 31, 2012 at 9:06 PM

      திருமதி. ஆனந்தி பிரேமா (மஹ்தூமியா தொடக்கப் பள்ளி)என வாசித்துக் கொள்ள வேண்டுகிறேன்

      Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.