Saturday, August 18, 2012

40 ஆண்டுகள் சேவை கூர்க்காவிற்கு பாராட்டு



கீழக்கரை.

கீழக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையாக இரவு பாதுகாப்பு பணியாற்றிய கூர்க்காவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலுள்ள தெருக்களில் இரவு பாதுகாப்பு பணியில் நேபாளம் பஜங் பகுதியைச் சேர்ந்த சந்திர பகதூர் சிங் ஈடுபட்டு வருகிறார். தனது 15 வயதில் கீழக்கரையில் பாதுகாப்பு பணியை துவக்கிய இவர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகவும், நேர்மையாகவும் பணியாற்றி வருகிறார். சந்திர பகதூர் சிங்கை கீழக்கரை மக்கள் சேவை சமூக நலஅமைப்பு நிறுவனர் முஜீப் மற்றும் மதார், கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டி டார்ச் விளக்கு உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.