Thursday, August 23, 2012

கீழக்கரை மக்தூமியா பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய விழா மேடை திறப்பு நிகழ்ச்சி !







கீழக்கரை மக்தூமியா பள்ளி வளாகத்தில் மர்ஹூம் ஏகேஎஸ் கபீர் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள புதிய விழா மேடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஹைதர் அலி கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.முகம்மது சதக் தம்பி(தலைவர் பழைய குத்பா பள்ளி ஜமாத்) தலைமை வகித்தார்.துணை சேர்மன் ஹாஜா முகைதீன் முன்னிலை வகித்தார்.ஹமீது சுல்தான்(தாளாளர்,மக்தூமியா உயர் நிலைபள்ளி) வரவேற்புரை நிகழ்த்தினார்.செய்யது இப்ராகிம்(தாளாளர்,ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி),டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீக்,உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை மாசா ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் நிறுவ‌ன‌ர் இப்திகார் உள்ளிட்ட இளைஞ‌ர்க‌ள் க‌வ‌னித்த‌ன‌ர்.
நிக‌ழ்ச்சியில் ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். ஹிதாய‌த்துல்லா(பொருளாளர்,ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜ‌மாத்)ந‌ன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.