Saturday, August 25, 2012

ஹ‌மீதியா ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கு விலையில்லா லேப்டாப் வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி!


கீழக்கரை மேலத்தெரு ஹமீதியா ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது.

மேலத்தெரு ஹமீதியா ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் முகம்மது சதக் அறக்கட்டளை நிறுவனர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்து லேப்டாப்பை மாணவர்களுக்கு வழங்கினார். பள்ளி தாளாளர் யூசுப்சாகிபு, முகமது சதக்பாலிடெக்னிக் கல்லு�ரி முதல்வர் அலாவுதீன், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார். இதில் சிராஜ் மற்றும் மேலத்தெரு உஸ்வது�ன்ஹசனா முஸ்லீம் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.