கீழக்கரையில் காலவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்!நகராட்சி நடவடிக்கை!
கீழக்கரையில் சில இடங்களில் காலவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது இதனையடுத்து நகராட்சி மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் சோதனை செய்யபட்டு விற்பனைக்கு இருந்த தண்ணீர் பாக்கெட்டுள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சதக் என்பவர் கூறுகையில்,
இது போன்ற காலவதியான தண்ணீரால் பல்வேறு நோய்களும் உண்டாகிறது.பள்ளி சிறுவர் சிறுமிகள் இதனை வாங்கி பயன்படுத்துவதால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.இதனை சப்ளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போல போக்குவரத்து மிகுந்த குறுகிய சாலைகளில் புதிய அல்லது மராமத்து பார்க்கும் வீடுகளில் வாசல் திண்ணைகள் வெளியில் அமையா வண்ணம் கண்காணிப்பதும் உங்கள் கடமைதான்.
ReplyDeleteஏற்கனவே அமைத்த வீடுகளில் அதன் அகலத்தை (நீளத்தை அல்ல)குறைக்க பாரபடசமற்ற நடவடிக்கை எடுங்கள்.நகரில் வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது அவசியமான நடவடிக்கையாகும்