Thursday, August 30, 2012

கீழக்கரையில் முஸ்லீம் லீக் பேனர்கள் கிழிப்பு ! க‌டும் க‌ண்ட‌ன‌ம்!



கீழக்கரை, ஆக.30:

கீழக்கரையில் நள்ளிரவு, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வேலூர் எம்பியுமான அப்துல் ரஹ்மான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று கீழக்கரை வருகிறார். அவரை வரவேற்று அக்கட்சி சார்பில் நகரில் பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்மநபர்களால் பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. இதனால் அக்கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பேனர் கிழிசல்கள் சரிசெய்யப்பட்டன.

இது குறித்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் வருசை முகம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லீம் லீக் வளர்ச்சியை பொறுக்க முடியாமலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் விஷமிகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். கட்சியினர் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். இதில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்படும்� என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.