Tuesday, September 25, 2012

கீழ‌க்க‌ரையில் 3 மீன‌வ‌ர் ச‌ங்க‌ங்க‌ள் ஒரே ச‌ங்க‌மாக‌ ச‌ங்க‌ம‌ம்!புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு!


கீழக்கரை சிறுதொழில் மீனவர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கீழக்கரையில் சிறுதொழில் மீனவர் சங்கம், சங்குளி தொழிலாளர் சங்கம், பாசிகுளி தொழிலாளர் சங்கம் தனியே செயல்பட்டு வந்தன. இம்மூன்று சங்கங்கள் இணைந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒரே சங்கமாக செயல்பட தீர்மானிக்கப்பட்டது.

 கீழக்கரை சிறுதொழில் மீனவர் சங்கம் என பெயரிட்டு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக லுக்மாயின் ஹக்கீம், துணைத்தலைவராக செய்யது கருணை, செயலராக முகைதீன், துணைச்செயலாராக அக்பர்அலி, பொருளாளராக செய்யது அகமதுகபீர், செயற்குழு உறுப்பினர்களாக செய்யது அபுதாஹிர், முகமது அப்துல்காதர், ஹாஜா அலாவுதீன், முகமது அலியார், முகைதீன் கருணை, அகட்டி என்ற முகைதீன்கருணை, ஜெய்னுல் ஆப்தீன், கவுரவ ஆலோசகர்களாக லெப்பைதம்பி, சுல்தான் செய்யது இபுராகிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

1 comment:

  1. கீழக்கரை சிறுதொழில் மீனவர் சங்கம் தொடர வாழ்த்துக்கள்... நன்றி..

    by www.99likes.blogspot.com

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.