Monday, September 3, 2012

கீழக்கரை பாலிடெக்னிக் ரோட்ராக்ட் புதிய‌ நிர்வாகிகள் தேர்வு !




கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரோட்ராக்ட் புதிய நிர்வாகிகளாக பாலிடெக்னிக் மாணவர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் அலாவுதீன் தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா,தலைவர் ரமேஷ் பாபு கல்லூரி தாளாளர் யூசுப் சாகிப் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

தலைவராக தவ்பீக் அலி, செயலாளராக ஆசிக் முஸ்தபா,உதவி தலைவராக பழனியப்பன்,இணை செயலாளர் வீரர் அப்துல்லா,பொருளாளர் முகம்மது ரபீக்,இயக்குநர்களாக சதாம் ஹுசைன்,யஹியா சுலைமான்,அப்துல் அஜீஸ் மற்றும் சீனி ராவுத்தர்,முகம்மது யாசிக் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.

ஜெயகுமார்,சேக் தாவுத்,மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பட்டய தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் ரோட்ராக்ட் மாணவர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.