Thursday, September 6, 2012

தொடரும் மின்சார விபத்து !கீழ‌க்கரை தெற்குதெரு பகுதியில் மின்க‌ம்பியில் தீப்ப‌ற்றிய‌து !



கீழக்கரை தெற்குதெரு சொக்கநாதர் கோவில் அமைந்துள்ள பகுதியில் இன்று இரவு 10 . 30 மணியளவில் மின்சார கம்பி தீ பற்றி அறுந்து விழுந்தது. இத‌னால் அப்ப‌குதியில் ப‌ர‌ப‌ர‌ப்பு ஏற்ப‌ட்டது.உட‌ன‌டியாக அங்கிருந்தவ‌ர்க‌ள் த‌க‌வ‌ல் கொடுத்த‌தின் பேரில் மின் ஊழிய‌ர்க‌ள் ப‌ழுது பார்த்த‌ன‌ர்.இத‌னால் அப்ப‌குதி முழுவ‌து இருளில் முழ்கிய‌து.

இது குறித்து ச‌த‌க் இப்ராகிம் கூறுகையில்,

அப்பகுதியில் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர்.இறைவ‌ன் அருளால் அறுந்து விழுந்த மின் கம்பியால் யாருக்கும் பாதிப்பில்லை.தொட‌ர்ந்து இதுபோன்ற‌ விப‌த்துக்க‌ள் ந‌டைபெறுகிற‌து.கீழ‌க்க‌ரை முழுவதும் பழைய மின்க‌ம்பிக‌ளை புதிய மின்க‌ம்பிக‌ளை நிறுவ‌ வேண்டும் என்றார்

1 comment:

  1. 20 years old concrete posts are seems to be very weak. and may fallen at any time in ward no. 4.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.