Sunday, September 2, 2012

கீழக்கரை முழுவதும் சுகாதாரத்தை வலியுறுத்தி பிளக்ஸ் போர்டுகள் அமைக்க ஏற்பாடு!






கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பில் அதன் நிர்வாகிகளான கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்,சாலிஹ் ஹுசைன்,பாபா பக்ரூதீன் உள்ளிட்டோர் சுகாதாரத்தை வலியுறுத்தி தாங்களே முன் வந்து நகரில் குப்பைகள் நிறைந்துள்ள பகுதிகளில் விளம்பர போர்டுகள் நிறுவி வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது,

பல்வேறு இடங்களில் ஒவ்வொன்றாக நிறுவி வருகிறோம்.நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற சுகாதாரத்தை வலியுறுத்தி விளம்பர போர்டுகளை ஏற்படுத்த உள்ளோம் இதன் மூலம் மக்களுக்கு சிறிதேனும் பயன் கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். ஒத்துழைப்பு அளிக்கும் கீழக்கரை நகராட்சிக்கும் நன்றி என்றனர்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 2, 2012 at 11:33 AM

    சகோ:முகைதீன் இபுறாகிம் (வார்டு 18)நகரில் நான்கு பேர் அறிய மக்கள் சேவை செய்து வருவது பாராட்டுகுரியதாக உள்ளது. அவரைப்பற்றி சக மக்கள் பிரதிநிதிகள் குறை கண்டாலும் ஒருவர் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது.எல்லோருக்கும் கெட்டவராகவும் இருக்க முடியாது என்பதையும் நாம் மனதில் கொள்வோமாக..

    அவரது அயராத சேவை நகருக்கு இன்றைய சூழலில் தேவை என்பதில் மாற்று கருத்து கிடையாது.HATS UP JANAB. MOHIDEEN IBRAHIM,GO HEAD WE ARE ALL WITH YOU..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.