Wednesday, September 5, 2012

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியருக்கு விலையில்லா காலணி!


கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் பள்ளி மாணவியருக்கான விலையில்லா காலணிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான‌ பள்ளி மாணவிகள் பயனடைந்தனர்.

இதற்கான நிகழ்ச்சி கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் செய்யது இபுராகிம் (ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) தலைமை வகித்தார்.

கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் பசீர் அகமது, பொருளாளர் ஹாஜா அனீஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக், கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் செயலாளர். முகைதீன் தம்பி,பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது மீரா, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் உறுப்பினர் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் முகைதீன் இப்ராகிம், பொருளாளர் சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இதில் நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள் இராஜேந்திரன், விஜயன், கெஜி என்கிற கெஜேந்திரன், கவுன்சிலர்கள் இடி மின்னல் ஹாஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.