Friday, September 21, 2012

கீழ‌க்க‌ரை ச‌த‌க் கல்லூரியில் தேசிய‌ அளவிலான‌ 2 நாள் கருத்த‌ர‌ங்க‌ம்!



கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரியின் முதுக‌லை க‌ணிப்பொறி ப‌ய‌ன்பாட்டிய‌ல் துறையின் சார்பாக‌ தேசிய‌ ராணுவ‌ ஆராய்ச்சி ம‌ற்றும் வ‌ள‌ர்ச்சி நிறுவ‌ன‌ம்(டிஆர்.ஓ)புது டெல்லி உத‌வியுட‌ன் தேசிய‌ அள‌விலான‌ இர‌ண்டு நாள் க‌ருத்த‌ர‌ங்க‌ம் இணைய‌ த‌ள‌ சேவை என்ற‌ த‌லைப்பில் துவ‌க்க‌ விழா க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்ற‌து.

க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முக‌ம்ம‌து ஜகாப‌ர் த‌லைமை வ‌கித்தார்.முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர்,செய‌லாள‌ர் யூசுப் சாகிப் இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர். துறை த‌லைவ‌ர் பேராசிரிய‌ர் முக‌ம‌து ர‌பி வ‌ர‌வேற்றார்.இந்நிக‌ழ்ச்சியில் திருச்சி தொழில்நுட்ப‌ நிறுவ‌ன‌த்தில்(என்டிஐ)ப‌ணியாற்றும் பேராசிரிய‌ர் பால‌சுந்த‌ர‌ம் க‌ல‌ந்து கொண்டு பேசினார்.

ச‌த‌க் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜகாப‌ர் பேசுகையில், தேரை ஓட்டுவ‌த‌ற்க்கு எப்ப‌டி அச்சானி தேவையோ அதே போல் த‌ற்போது உலக‌ம் இய‌ங்குவ‌த‌ற்கு க‌ணிணி ப‌ய‌ன்பாடு முக்கிய‌ம் என்ப‌தை வ‌லியுறுத்தி பேசினார்.
இந்நிக‌ழ்ச்சியில் ஏராள‌மானோர் கல‌ந்து கொண்ட‌ன‌ர்.

1 comment:

  1. நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    by www.99likes.blogspot.com

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.