Saturday, September 22, 2012

மின்வெட்டை க‌ண்டித்து குழுமிய‌ ம‌க்க‌ள்!21 பேர் மீது வ‌ழ‌க்கு ப‌திவு!இத‌ஜ‌ க‌டும் க‌ண்ட‌ன‌ம்!

கீழக்கரையில், மின்வெட்டை கண்டித்து இரவில்  மெழுகுவர்த்தியுடன் பொதுமக்கள் திரண்டன‌ர் .பின்ன‌ர் போலீசார் கேட்டு கொண்ட‌த‌ற்கிண‌ங்க‌ அமைதியாக‌ க‌லைந்து சென்றன‌ர்.

இது குறித்து முன் அனுமதியின்றி சாலையில் கூடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன் அனுமதியின்றி சாலையில் கூடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டியின் நகர் தலைவர் செய்யது அபுதாகிர், பொருளாளர் காதர், முகம்மது இபுராகிம், யாசின், பாருக் உள்பட 21 பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ள‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

இது குறித்து இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் அமீர‌க‌ பொறுப்பாள‌ர் கீழை ஜ‌மீல் கூறிய‌தாவ‌து,

ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் போராட்ட‌ங்க‌ள் என்ற‌ பெய‌ரில் ம‌ர‌த்தை வெட்டுவ‌து,ரோடுக‌ளை சேத‌ப்ப‌டுத்துவ‌து என்று உண‌ர்ச்சி வேக‌த்தில்  ந‌டைபெறுகின்ற‌ன‌.அத‌ற்கெல்லாம் வ‌ழ‌க்கு ப‌திவு இல்லை கைது இல்லை ஆனால் மிக‌வும் அமைதியான‌ முறையில் மெழுகுவ‌ர்த்தியுட‌ன் ம‌க்க‌ள் குழுமி எதிர்ப்பை ப‌திவு செய்து விட்டு க‌லைந்து சென்றிருக்கின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ள் மீது வ‌ழ‌க்கா? அதிர்ச்சியாக‌ இருக்கிற‌து.நாம் ஜ‌ன‌நாயாக‌ நாட்டில்தான் இருக்கிறோமா ?


வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருந்தால் உட‌ன‌டியாக‌ வ‌ழ‌க்கை வாப‌ஸ் பெற‌ வேண்டும்.இத‌ற்கு இந்திய‌ த‌வ்ஹீத்  ஜ‌மாத் சார்பில் க‌டும் க‌ண்ட‌ன‌த்தை தெரிவித்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.