Monday, September 24, 2012

ச‌த‌க் க‌ல்லூரியில் 50க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ தேசிய‌ அள‌விலான‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்!

ம‌துரை தியாக‌ராஜ‌ர் பொறியிய‌ல் க‌ல்லூரி பேராசிரிய‌ர் ம‌னோக‌ர‌னுக்கு ச‌த‌க் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜகாப‌ர் நினைவு ப‌ரிசு வ‌ழ‌ங்கினார்.

ராமநாதபுரம் மாவ ட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லு£ரியில் இயந்திர கட்டுப்பாடு, அளவீடு, ஒழுங்குமுறை குறித்த தேசிய கருத்தரங்கம் நடந்தது.

 கருத்தரங்கிற்கு கல்லு£ரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் யூசுப் சாகிபு, இயக்குநர் ஹபீப்முகமது சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னியல், மின்னணுவியல் துறைத்தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

தமிழ்நாடு, பிற மாநிலங்களின் மின் உற்பத்தி திறன் பற்றி கூறி, மின் தட்டுப்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மதுரை தியாகராஜர் பொறி யியல் கல்லூரி பேராசிரியர் மனோகரன் பேசினார். உதவிப் பேராசிரியர் லட்சுமிகாந்தன் நன்றி கூறினார். சென்னை, மது ரை, புதுக்கோட்டை உட் பட 50 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. use full news..
    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...keelakaraitimes.

    by. www.99likes.blogspot.com

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.