Thursday, September 20, 2012

ம‌த்திய‌ அர‌சை க‌ண்டித்து கீழ‌க்க‌ரை த‌பால் நிலைய‌ம் முன்பு சாலையில் அம‌ர்ந்து போராடிய‌வ‌ர்க‌ள் கைது!


கீழ‌க்க‌ரை மார்க்சிஸ்ட் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி சார்பில் டீச‌ல் விலை உய‌ர்வு,சில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அன்னிய‌ முத‌லீடு ஆகிய‌ ச‌ட்ட‌ங்க‌ளை திரும்ப‌ பெற‌ கோரியும் ம‌த்திய‌ அர‌சை க‌ண்டித்து  கீழ‌க்க‌ரை த‌பால் அலுவ‌ல‌க‌ம் முன் போராட்ட‌ம் நடைபெற்ற‌து.


மார்க்சிஸ்ட் க‌ட்சியின் ராம‌நாத‌புர‌ம் தாலுகா  செயலாள‌ர் ராஜ்குமார் த‌லைமையில் ,கீழ‌க்க‌ரை ந‌க‌ர் செயலாள‌ர் ம‌காலிங்க‌ம் முன்னிலையில் 50க்கும் மேற்ப‌ட்ட‌ க‌ம்யூனிஸ்ட் தொண்ட‌ர்க‌ள் வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலை வ‌ழியாக‌ ஊர்வ‌லமாக‌ வ‌ந்து கிழ‌க்குதெரு தபால் அலுவ‌ல‌க‌ம் எதிரே சாலையில் அம‌ர்ந்து போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.இவ‌ர்க‌ள் அனைவ‌ரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்ற‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.